பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அடாவடியாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அடாவடிக்கு பெயர்போன ஆக்கிரமிப்பு டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. அடாவடிக்கு பெயர்போன இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மதுப்பிரியர்கள் போதையில் சாலையிலேயே அலங்காலமாக படுத்துக் கிடப்பதோடு சாலையில் செல்வோரிடம் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனிடையே அடாவடிக்கு பெயர்போன டாஸ்மாக் கடை எண் 1830 நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனால் சாலையின் குறுக்கே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...