பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அடாவடியாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அடாவடிக்கு பெயர்போன ஆக்கிரமிப்பு டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. அடாவடிக்கு பெயர்போன இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மதுப்பிரியர்கள் போதையில் சாலையிலேயே அலங்காலமாக படுத்துக் கிடப்பதோடு சாலையில் செல்வோரிடம் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனிடையே அடாவடிக்கு பெயர்போன டாஸ்மாக் கடை எண் 1830 நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனால் சாலையின் குறுக்கே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...