வால்பாறையில் பெண் தொழிலாளியை கடித்து புரண்ட கரடி - படுகாயமடைந்த பெண் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று வேலைக்கு சென்ற பெண் தொழிலாளியை கடித்து புரண்டுள்ளது. இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கமலம் என்ற பெண் தொழிலாளி இன்று காலையில் தேயிலை பறிப்பதற்காக தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பதுங்கியிருந்த கரடி அவரை தாக்கியது சக தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாடர்பால்ஷ் எஸ்டேட் 3 வது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலம் வயது 59. இன்று காலை தேயிலை தோட்ட வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தொழிலாளியை தாக்கியது. இதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. முதல் உதவி சிகிச்சைக்காக எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.



பின்னர், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...