திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வு - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில், காலை ஆறு மணிக்கே பள்ளி மாணவர்கள் ஆர்வமுடம் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.



திருப்பூர்: மூளி குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிகளை வேர்கள் அமைப்பினருடன் இணைந்து பள்ளி மாணவர்களும் பங்கேற்று அகற்றினர். இதில் ஏராளமான தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.



திருப்பூர் மண்ணரை அருகில் வேர்கள் அமைப்பு பராமரிப்பில் உள்ள மூளி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்தநிகழ்வில், 20 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.



இதில், அதிகாலை 6 மணிக்கே பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கு பிளாஷ்டிக் தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு வந்திருந்த அமைப்பு நண்பர்கள் குழந்தைகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.



நேற்று மூளி குளத்தில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். வேர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த களப்பணியில் கலந்து கொண்ட அமைப்புக்கள் துப்புரவாளன், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பு, இளம் துளிர் அமைப்பு, Little kingdom பள்ளி, Aalaya Academy பள்ளி, இயற்கை ஏரி குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Rotary Metal town, 'பசுமை திருப்பூர் நகரம்' அமைப்பு, நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு இன்றைய நிகழ்வுக்கு பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்கிய அன்புடன் திருப்பூர், ஸ்ரீ அக்ஷய பாத்திரம், மாயா பவுண்டேஷன் மற்றும் அனைவருக்கும் நன்றி என வேர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...