சுதந்திர தினம் கொண்டாட்டம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேரணியை மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைக்கோவில் என்ற தனியார் பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து, மாணவ மாணவியர் மூலனூர் அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வடுகபட்டி பிரிவு அண்ணா நகர் வழியாக பேரணி பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.



பள்ளியின் தாளாளர் சுந்தரம் தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பேரணியை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெஞ்சன், நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...