சுதந்திர தினம் கொண்டாட்டம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேரணியை மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைக்கோவில் என்ற தனியார் பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து, மாணவ மாணவியர் மூலனூர் அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வடுகபட்டி பிரிவு அண்ணா நகர் வழியாக பேரணி பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.



பள்ளியின் தாளாளர் சுந்தரம் தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பேரணியை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெஞ்சன், நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...