நமது தொழிற் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற் பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை 13.07.2023 முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு Signature Campaign (கையெழுத்துஇயக்கம்) நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து Project களை காட்சிப்படுத்தி விருந்தினர்கள் பார்வையிட உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை புரியும் விருந்தினர்களைவ்ஊக்குவிக்கும் விதமாக தொழிற்கல்வி குறித்து பேச்சுப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவை நடைபெற உள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற் பயிற்சியின் நன்மைகள்

குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...