மாலைநேரத்தில் மலைப்பாதையில் உலாவிய இரண்டு காட்டு யானைகள் – மக்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வைரல்

கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.



கோவை: பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலையில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

இந்த நேரத்தில் பக்தர்கள் நடைபணமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள பெரிய தடாகம் பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயில் தனிந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாங்கரை பெரிய தடாகம், பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.



இந்நிலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கி இருக்கலாம் எனவும் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...