மாலைநேரத்தில் மலைப்பாதையில் உலாவிய இரண்டு காட்டு யானைகள் – மக்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வைரல்

கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.



கோவை: பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலையில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

இந்த நேரத்தில் பக்தர்கள் நடைபணமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள பெரிய தடாகம் பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயில் தனிந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாங்கரை பெரிய தடாகம், பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.



இந்நிலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கி இருக்கலாம் எனவும் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...