ஈஷா யோக மையத்தில் கல்லூரி மாணவன் ரமேஷ் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்


திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த விவசாயி மன்னர்கண்ணன் என்பவரின் மகன் ரமேஷ்(21), இவர் வேலூர் ஜிடெக் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். இவர் நேற்று காலை நண்பர்களுடன்

சுற்றுலாவிற்கு வந்து கோவை ஈஷா மையத்திலுள்ள சூரிய குண்டம் குளத்தில் மூழ்கி குளிக்கும்போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் இறந்து நீண்ட நேரமாகிவிட்டது என தெரிவித்துள்ளனர். 

பின்னர் உடற்கூறு ஆய்விற்காக ரமேஷின் உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டது. ஈஷா மையத்தில் ஆண்கள் குளிப்பதற்கு சூரிய குண்டமும், பெண்கள் குளிக்க சந்திர குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டங்களில் பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கங்கள் குண்டத்தின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். பாதரசம் உடலுக்கு தீங்கிளைக்க கூடியது என ஈஷா மையத்தின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் இன்று கோவை வந்துள்ள ரமேஷின் குடும்பத்தினர் தங்களது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது மகன் ஆரோக்கியமாக இருந்து வந்ததாகவும் அவருக்கு எந்தவிதமான மருத்துவ பிரச்சனைகளும் இதுவரை இருந்ததில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழிபாட்டு தளம் ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் ஒரு குளத்தில் பாதரச லிங்கம் அமைத்துள்ள நிலையில் அது என்ன மாதிரியான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மகனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...