மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு – பேரனுடன் சென்றபோது விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பேரனுடன் சென்ற மூதாட்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...