வனத்தில் யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரப்பட உள்ளது என்றார்.



கோவை: வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நேற்று தொடங்கியது.



இந்த துவக்க விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது,



முதல் முறையாக தமிழ்நாட்டில் யானைகளுக்கு கருத்தரங்கம் நடத்தி உள்ளோம். இதில், வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். யானையின் வாழ்விடம், வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே இதுபோன்ற கருத்தரங்கம் எங்கும் நடக்கவில்லை. வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதில் குழு அமைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளோம். அவுட்-காய் (நாட்டு வெடி) போன்ற விடயங்களை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையில் ஈடுபடுத்தபட்டுள்ளது.

காடுகளை பாதுகாக்க நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வன ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.தடாகம் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...