உதகை, வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி கோவை வருகை!

உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாலை மார்க்கமாக ஊதகை வழியாக வயநாட்டுக்கு செல்லும் அவர், தோடா கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.



ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி வழியாக வயநாடு செல்கிறார். ஊட்டியில் தோடா கிராமத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள மலைவாழ் மக்களை சந்திக்கிறார்.

மேலும் அப்பகுதியில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வயநாடு செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு விமானம் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...