நிலுவை தொகையை வழங்க கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: நிலுவை ஊதிய தொகையினை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் திருமுருகன் பூண்டி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணி மாற்றம் செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை ஊதிய தொகை கூட வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.



உடனடியாக நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் இன்று 6 நகராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...