தாராபுரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கவுண்டச்சி புதூர் ஊராட்சி, நல்லாம்பாளையம் ஊராட்சி, பொம்மநல்லூர் ஊராட்சி, உள்ளிட்ட தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் சன்பாலு, ஆரோன் செல்வராஜ், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ், அரசு அதிகாரிகள் பானுப்பிரியா, குருநாதன், ரஞ்சித், ஜெயந்தி இசக்கிமுத்து, நாச்சி முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...