தாராபுரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கவுண்டச்சி புதூர் ஊராட்சி, நல்லாம்பாளையம் ஊராட்சி, பொம்மநல்லூர் ஊராட்சி, உள்ளிட்ட தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் சன்பாலு, ஆரோன் செல்வராஜ், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ், அரசு அதிகாரிகள் பானுப்பிரியா, குருநாதன், ரஞ்சித், ஜெயந்தி இசக்கிமுத்து, நாச்சி முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...