கோவையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் - பாமக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாமக நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆவணங்களுடன் அசோக் ஸ்ரீநிதி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது.



ஒரு ஸ்மார்ட் போர்டு 2 லட்சம் ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என ஸ்மார்ட் போர்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரியவந்தது.

மேலும் இணைய சேவை பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டாலும் கூட ஒரு ஸ்மார்ட் போர்டுக்கு 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது.

அதேசமயம் இத்திட்டத்தில் தொகுதி நிதியை தொகையாக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது, ஊரக வளர்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் டெண்டர் பணிகள் மூலம் தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...