மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்தியகிரக போராட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், மேடையின் முன்பு உப்பு பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு பிறகு மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மணிப்பூர் கலவரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசு தான். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாக்த் அலிகான், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், உடுமலை நகர அமைப்பாளர் சக்திவேல், வழக்கறிஞர் பெரியார்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...