கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!

கோவை பீளமேடு புதூர் அருகே தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரான ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.


கோவை: கோவை பீளமேடு புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் இருந்தவாறு செல்போனில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிசிடிவி வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் நபர் ஒருவரை வீட்டில் சென்று பார்க்க சொன்னதாக தெரிகிறது. அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணமும் மாயமானது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி டிவிஆர்-யும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...