கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!

கோவை பீளமேடு புதூர் அருகே தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரான ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.


கோவை: கோவை பீளமேடு புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் இருந்தவாறு செல்போனில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிசிடிவி வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் நபர் ஒருவரை வீட்டில் சென்று பார்க்க சொன்னதாக தெரிகிறது. அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணமும் மாயமானது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி டிவிஆர்-யும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...