10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்!

கள் இறக்க அனுமதி, தேங்காய் மற்றும் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கள் இறக்க அனுமதி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை 150 நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பச்சை தேங்காய் ஒரு டன் 40,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.



தமிழ்நாடு அரசு நெல் குவின்டாலுக்கு 3000 கரும்பு ஒரு டன்னுக்கு 5000 மரவள்ளிக்கிழங்கு ஒரு டன்னுக்கு 12,000 மஞ்சள் ஒரு குவின்டாலுக்கு 15,000 மக்காச்சோளம் ஒரு குவின்டாலுக்கு 3000 மாட்டுப்பால் ஒரு லிட்டர் 50 எருமை பால் ஒரு லிட்டர் 75 ரூபாய் என வழங்கிட வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து உயர் மின் கோபுரங்கள் திட்டங்களுக்கும் மாத வாடகை சந்தை மதிப்பு இழப்பீடு 100 சதவிகித கருணைத்தொகை வழங்கிட வேண்டும்.

ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் அமராவதி அணையை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த இச்சங்கத்தினர் மனு வழங்கி வருகின்றனர்.



அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர், வேலு மந்தராச்சலம் தலைமையில் மனு வழங்கப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...