கோவை அரசு மருத்துவமனையில் மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் - ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கோவையில் மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று முதல் 12ஆம் தேதி வரையும், செப்டம்பர் 13 முதல் 16 வரை 2ஆம் கட்டமாகவும், அக்டோபர் 9 முதல் 14 வரை 3ஆம் கட்டமாகவும் நடைபெற உள்ளது.




கோவை: கோவை அரசு மருத்துவமனையில், மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனையில், மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.



இதில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அருணா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் மூன்று கட்டங்களாக இன்று முதல் 12ஆம் தேதி வரையும் செப்டம்பர் 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரைக்கும் அக்டோபர் ஒன்பதாம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரையும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும் இதுவரை செலுத்த முடியாமல் தவறிய தடுப்பூசி தவணைகளை உடனே செலுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா பேசியதாவது, கோவை மாவட்டத்தில் இம்முகாமிற்கு தேவையான தடுப்பு மருந்துகள் தடுப்பூசிகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் குறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த முகாமில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக நகர்ப்புறங்களில் உள்ள தற்காலிக குடிசை பகுதிகள் செங்கல் சூளை மலைப்புற கிராமங்கள் மற்றும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்கள் உள்ளன.

மேலும், வெளிமாநிலத்திலிருந்து வேலை வாய்ப்பிற்காக கட்டிட வேலை மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளர்கள் மூலம் தெரியப்படுத்தி அங்கன்வாடி மையங்கள் அல்லது துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...