தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை!

தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், செயின் உள்பட 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற நிலையில், மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தாராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், செயின் உள்பட 7 பவன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.டி.ஐ ஆசிரியரான பாலதண்டபாணி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலம் குறைவால் இறந்து விட்டார்.

இவர் மறைவுக்கு பிறகு இவருடைய மனைவி மீராராணி (53) இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மீராராணி தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்தது வைத்து இருவரையும் கோவையில் குடி வைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீராராணி தாராபுரத்தில் தனியாக வசித்து வந்த போது உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்.



இந்நிலையில், தனது சொந்த வீடான தாராபுரம் சுப்பிரமணியபுரத்துக்கு கடந்த 3-ந் தேதி இரவு வீட்டுக்கு வந்த போது இவருடைய வீட்டின் முன் கதவு மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் வைத்திருந்த 5 ஜோடி தங்க கம்மல், 4 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.



சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...