தாராபுரம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் - விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

தாராபுரம் அடுத்த கொங்கனாபுரம் பிரிவு அருகே இன்னோவா காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீதி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த கிருபாகரன் (24) சஞ்சய் (24) ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினரான சந்திரன் (60) என்பவருடன் காரில் மதுரையில் இருந்து கோவை நோக்கி தாராபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இனோவா காரில் தாராபுரத்தில் சுகம் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால்புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோர் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் எதிர்நோக்கி வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்னோவா காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கார், சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இரு கார்களிலும் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...