கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துக - திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



திருப்பூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



மேலும், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...