கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துக - திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



திருப்பூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



மேலும், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...