கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துக - திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



திருப்பூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



மேலும், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...