கொடநாடு வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் - அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கோவையில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உடலில் கருப்பு சாயம் பூசி, அதில் வெள்ளை எழுத்துகளில் எழுதி வந்தனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமர வைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் அழகு மருதுராஜ் பேசியதாவது,



திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 90 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். வாயால் மட்டும் சொல்லவில்லை, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது, விசாரணை மாறுகின்றதே தவிர விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தனியார் தொலைக்காட்சி கொடநாடு வழக்கு குறித்து புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியது. அதில் குற்றவாளிகளை கேரளாவில் சந்தித்த போது எங்களை சந்தித்து ஒரு நபர் பேரம் பேசினார், காரிலே வந்து பணம் தந்தார் என்று அவர்கள் சொன்னார்கள்.

பல புகைப்படங்களை காட்டிய பொழுதும் மறுத்த அவர்கள், சேலம் இளங்கோவின் புகைப்படத்தை காட்டிய பொழுது அவர் தான் தங்களை சந்தித்தாக குற்றவாளிகள் சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட 20 நாட்களில் சேலம் இளங்கோவனுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பதவி, எடப்பாடி வகித்து வந்த அந்த பதவி கொடுக்கப்பட்டது.

இதே போல சஜீவன் என்பவருக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஒன்றாக , எல்லா பக்கமும் பார்த்தால் சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி வருகிறது.

கொடநாடு குறித்து தேர்தல் வாக்குறுதி கொடுத்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டது, ஏன் இது வரை குற்றவாளிகளை தண்டிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறை கூட தன் வாயை திறந்து இது வரை திமுக அரசை கேட்கவில்லை எனவும்,அதிமுக சார்பில் 14 முறை திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என ஏன் அதிமுக கேட்கவில்லை. எடப்பாடியுடன் இருப்பவர்கள் கொடநாடு என்ற பெயரை சொல்வது இல்லை. நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

அதிமுக கைது செய்தவர்களை திமுக பிணையில் எடுக்கின்றது. மொத்த விபரங்களையும் திமுக தெரிந்துகொண்டு, எடப்பாடியை பிணைகைதியாக, அரசியல் ரீதியாக வைத்துக்கொண்டு உள்ளடி வேலை பார்க்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட கருப்பு பெயிண்ட் அடித்து வந்த நான்கு பேரையும் போலீசார் விடுவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...