மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் மனித சங்கிலி போராட்டம்!

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க அரசை கண்டித்தும், பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்தும், கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்து முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



கோவை: மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அனைத்து முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களின் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைக்கும், பெண்கள் பாதுகாப்பின்மைக்கும் காரணமான பாஜக அரசை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக அனைத்து முற்போக்கு -ஜனநாயக இயக்கங்கள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், எஸ்டிபிஐ, புரட்சிகர இளைஞர் இயக்கம் உட்பட 15 க்கு மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மனித சங்கிலி போராட்டத்தின் போது மணிப்பூரில் அமைதி நிலவவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எனவும் வலியுறுத்தப்பட்டது. 80 நாட்களாக ஒரு மாநிலம் பற்றி எரிகின்றது, கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தீ வைத்து எரிக்கபட்டுள்ளது,



பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு அவமானபடுத்தபடுகின்றனர். இதை தடுக்கவோ, அமைதியை ஏற்படுத்தவோ, அரசியல் ரீதியாக பதில்சொல்ல மோடி தலைமையிலான மத்திய அரசோ, அமித்ஷாவோ தயாராக இல்லை.



அமைதி காக்க தவறிய மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும், பொருள் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்திய நாடே மணிப்பூர் ஒற்றுமையை விரும்புகின்றது. மனிதசங்கிலியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...