இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

வீரபாண்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் ஓட்டுனர் எனக்கூறி இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவதாக கூறி சுமார் 14 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வீரபாண்டி பகுதி சேர்ந்த சங்கர் என்பவர், தான் பல்லடம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜனிடம் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதற்கு நபர் ஒன்றுக்கு 30,000 கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சுண்ட மேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்த போது, சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறுக சிறுக பணத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் சுமார் 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணம் கொடுத்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...