தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக செயலாளர் இல.பத்மநாபன்

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த முதலமைச்சருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக அவரது நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாட கூடிய வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதனை ஏற்று தற்போது தமிழக முதல்வர் ஆடி பதினெட்டாம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கும் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...