உடுமலையில் பிரதமர் மோடியின் படத்தை உடைக்கும் மர்ம நபர் - வைரலாகும் வீடியோ!

உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவரான பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக கொடி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: உடுமலை அருகே பிரதமர் மோடியின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக இருந்து வருகிறார்.



இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்தும், கட்சி கொடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மர்ம நபர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...