உடுமலையில் பிரதமர் மோடியின் படத்தை உடைக்கும் மர்ம நபர் - வைரலாகும் வீடியோ!

உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவரான பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக கொடி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: உடுமலை அருகே பிரதமர் மோடியின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக இருந்து வருகிறார்.



இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்தும், கட்சி கொடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மர்ம நபர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...