தென்னை வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம்!

தென்னை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை 31 கிராமங்களில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது.



திருப்பூர்: தென்னை வியாபாரிகளை பாதுகாக்க கோரி ஆகஸ்டு மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது

இதுதொடர்பாக திருப்பூர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏர்முனை இளைஞர் அணியின் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது,

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டர் விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய வகையில் தமிழக அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை 140 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

35 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளதை நீக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 31 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 31 கிராமங்களிலும் தினந்தோறும் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...