மூலனூரில் ரூ.1.2 லட்சம் மதிப்பிலான பன்றிகள் திருட்டு - 6 பேர் கைது!

தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் சுமார் 1.20 மதிப்பிலான பன்றிகளை திருடிய தாராபுரம் ரோடு பழனி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண்குமார் (32) மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன் (24), ராசுகுட்டி (25), ரமேஷ் குட்டி(25), விஜயகுமார்(33), தவசியப்பன் (29) உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் சுமார் 1.20 மதிப்பிலான பன்றிகளை திருடிய வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் கன்னிமார் கோவில் கொழிஞ்சி காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் குடும்பத்துடன் பன்றி வளர்த்து வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னிமார் கோவில் புதூர் கொழிஞ்சி காட்டு தோட்டத்தை ஒப்பந்தம் எடுத்து அங்கு பட்டி அமைத்து 50 பன்றிகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவிக்கு வளைகாப்பு என்பதால் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள கோவில்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனிடையே சந்தோஷின் தந்தை அன்று மாலை பன்றிகளை பட்டியில் அடைத்து விட்டு மறுநாள் காலையில் 6 மணிக்கு வந்து பார்க்கும் போது 20 பன்றிகளையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மூலனூர் காவல் நிலையத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 20 பன்றிகள் திருட்டுப் போனது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அசோக் லேலண்ட் தோஸ்த் வண்டியில் 20 பன்றிகளுடன் ஆறு பேர் சென்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

வண்டியின் பெயர் பலகை மற்றும் வண்டியின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் பழைய தாராபுரம் ரோடு பழனி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண்குமார் (32) தலைமையில் திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.



இதனையடுத்து, அருண்குமார் உடன் திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன் (24), ராசுகுட்டி (25), ரமேஷ் குட்டி(25), விஜயகுமார்(33), தவசியப்பன் (29) உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.



மேலும் திருடப்பட்ட 20 பன்றிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்த மூலனூர் காவல் துறையினர், தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...