மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமை, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...