உடுமலை மலைகிராமங்களில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உடுமலை அருகேயுள்ள பொறுப்பாறு மலைகிராமத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மாவட்ட நக்சல் பிரிவு மற்றும் சாய் ஸ்பீச், ஹியரிங் எய்ட் சென்டர் இணைந்து, காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைகிராம மக்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பொறுப்பாறு மலைக்கிராமத்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சாய் ஸ்பீச் & ஹியரிங் எய்ட் சென்டர் உடன் இணைந்து நடத்தும் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார் மேலும் காது பரிசோதனை நிபுணர். கார்த்திக் காது பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார். ‍‌‌‍‌‍‌‌எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரையாற்றினார்,



இந்த நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொறுப்பாறு மலை கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...