உடுமலை மலைகிராமங்களில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உடுமலை அருகேயுள்ள பொறுப்பாறு மலைகிராமத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மாவட்ட நக்சல் பிரிவு மற்றும் சாய் ஸ்பீச், ஹியரிங் எய்ட் சென்டர் இணைந்து, காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைகிராம மக்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பொறுப்பாறு மலைக்கிராமத்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சாய் ஸ்பீச் & ஹியரிங் எய்ட் சென்டர் உடன் இணைந்து நடத்தும் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார் மேலும் காது பரிசோதனை நிபுணர். கார்த்திக் காது பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார். ‍‌‌‍‌‍‌‌எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரையாற்றினார்,



இந்த நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொறுப்பாறு மலை கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...