உடுமலை மலைகிராமங்களில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உடுமலை அருகேயுள்ள பொறுப்பாறு மலைகிராமத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மாவட்ட நக்சல் பிரிவு மற்றும் சாய் ஸ்பீச், ஹியரிங் எய்ட் சென்டர் இணைந்து, காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைகிராம மக்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பொறுப்பாறு மலைக்கிராமத்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சாய் ஸ்பீச் & ஹியரிங் எய்ட் சென்டர் உடன் இணைந்து நடத்தும் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார் மேலும் காது பரிசோதனை நிபுணர். கார்த்திக் காது பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார். ‍‌‌‍‌‍‌‌எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரையாற்றினார்,



இந்த நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொறுப்பாறு மலை கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...