கோவையில் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை கெம்பட்டி காலனிக்கு உட்பட்ட ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட 2ஆம் நாள் விண்ணப்ப பதிவு முகாமை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபட்டு விட கூடாது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி ஒக்கிலியர் வீதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், மண்டல குழு தலைவர் மீனாலோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...