கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து மின்சார பற்றாக்குறை தீர்ப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையினை தீர்ப்பது குறித்து கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து பில்டிங் எபிசியன்சி எக்சலரேட்டர் என்னும் பயிலரங்கை நடத்தியது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் டி.ஆல்துரை இக்கருத்தரங்கில் பேசும்போது, பசுமை கட்டிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சிஐஐ மற்றும் ஐஜிபிசி-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு மெகா வாட் அளவிற்கு மின்சாரப் பயன்பாட்டினை குறைத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஆல்துரை தனது உரையில் மேலும் பேசுகையில், இந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 37 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சார அளவை அதிகரிக்கக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவர் எம்.ரமேஷ் பேசுகையில், கோவையில் தற்பொழுது 35 ஐஜிபிசி சான்று பெற்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் ஐடி பார்க், தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோறின் ஒத்துழைப்பால் இந்த கருத்தரங்கம் ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறும். இது கோவையை செழுமைமிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும் என்றார்.

ஐஜிபிசி கோவை மாவட்டத் தலைவர் ராஜேஸ் பி லுன்டு பேசுகையில், இன்று நடைபெற்ற இப்பயிலறங்கில் கோவை மாநகராட்சி சார்பாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாகவும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது கோவையைச் சேர்ந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அளித்த ஒத்துழைப்புகள் குறித்தும், கோவையை செழுமைமிக்கதாக மாற்றும் முயற்சியில் அவருடைய அர்ப்பணிப்பும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...