கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து மின்சார பற்றாக்குறை தீர்ப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையினை தீர்ப்பது குறித்து கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து பில்டிங் எபிசியன்சி எக்சலரேட்டர் என்னும் பயிலரங்கை நடத்தியது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் டி.ஆல்துரை இக்கருத்தரங்கில் பேசும்போது, பசுமை கட்டிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சிஐஐ மற்றும் ஐஜிபிசி-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு மெகா வாட் அளவிற்கு மின்சாரப் பயன்பாட்டினை குறைத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஆல்துரை தனது உரையில் மேலும் பேசுகையில், இந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 37 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சார அளவை அதிகரிக்கக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவர் எம்.ரமேஷ் பேசுகையில், கோவையில் தற்பொழுது 35 ஐஜிபிசி சான்று பெற்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் ஐடி பார்க், தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோறின் ஒத்துழைப்பால் இந்த கருத்தரங்கம் ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறும். இது கோவையை செழுமைமிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும் என்றார்.

ஐஜிபிசி கோவை மாவட்டத் தலைவர் ராஜேஸ் பி லுன்டு பேசுகையில், இன்று நடைபெற்ற இப்பயிலறங்கில் கோவை மாநகராட்சி சார்பாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாகவும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது கோவையைச் சேர்ந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அளித்த ஒத்துழைப்புகள் குறித்தும், கோவையை செழுமைமிக்கதாக மாற்றும் முயற்சியில் அவருடைய அர்ப்பணிப்பும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...