பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் - தபெதிக அறிவிப்பு!

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பேசியதாவது,



இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜகவும், பிரதமராக இருக்கின்ற மோடியும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக தேர்தலை கணக்கிட்டு அமைதியாக இருந்த மணிப்பூரில் இரண்டு இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்த்தில் கூட நடக்காத அளவிற்கு இந்த செயல்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஒரு தொகுதி வாக்கு வங்கிற்காக ஏற்பட்ட கலவரம், தற்போது 500க்கும் மேற்பட்ட பாராளுமன்ற தொகுதி பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

மணிப்பூர் கலவர செய்தியை மறைப்பதற்கு தான் தமிழ்நாட்டிலே மத்திய அரசு பல்வேறு திசை திருப்பும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவர நிலையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையிலும், பாஜகவை கண்டித்தும் அனைத்து கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த உள்ளோம், அந்த வகையில் வரும் நான்கு நாட்களில் மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...