பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் - தபெதிக அறிவிப்பு!

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை உருவாக்கிய பாஜகவை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பேசியதாவது,



இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜகவும், பிரதமராக இருக்கின்ற மோடியும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக தேர்தலை கணக்கிட்டு அமைதியாக இருந்த மணிப்பூரில் இரண்டு இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்த்தில் கூட நடக்காத அளவிற்கு இந்த செயல்பாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஒரு தொகுதி வாக்கு வங்கிற்காக ஏற்பட்ட கலவரம், தற்போது 500க்கும் மேற்பட்ட பாராளுமன்ற தொகுதி பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

மணிப்பூர் கலவர செய்தியை மறைப்பதற்கு தான் தமிழ்நாட்டிலே மத்திய அரசு பல்வேறு திசை திருப்பும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவர நிலையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையிலும், பாஜகவை கண்டித்தும் அனைத்து கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த உள்ளோம், அந்த வகையில் வரும் நான்கு நாட்களில் மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...