கோவை சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு!

கோவை கதிர்நாயக்கன் பாளையம் லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சாமி சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை குருடிமலை அடிவாரம் குருடம்பாளையம் கிராமம் கதிர் நாயக்கன்பாளையம் ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து மேளதாளங்களுடன் மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி, பிரிவு, சர்வோதய காலனி, ஜங்கம் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி வழியாக கதிர் நாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும், ஊர் பக்தர்கள் திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு விஜயா நகர், பிரைட் ஹோம், வாட்டர் போர்டு காலனி, குரு சக்தி கார்டன், ஏடி காலனி, ரேணுகாபுரம் வழியாக கிரீன் பீல்டில் உள்ள ஞான விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கும் பூஜைகள் செய்யப்பட்டு திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்களின் படை சூழ ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லட்சுமி நகர் பேஸ் 3ல் உள்ள அருள்தரும் சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 48 நாட்கள் இறைவனின் திருமேனி சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இறை அன்பர்கள் வணங்கி தலவிருட்சம் வில்வம், வன்னி மரம் வைக்கப்பட்டது. பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் ஏராளமான இறையன்பர்களும் சிவனடியார்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...