கோவை சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு!

கோவை கதிர்நாயக்கன் பாளையம் லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சாமி சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை குருடிமலை அடிவாரம் குருடம்பாளையம் கிராமம் கதிர் நாயக்கன்பாளையம் ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து மேளதாளங்களுடன் மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி, பிரிவு, சர்வோதய காலனி, ஜங்கம் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி வழியாக கதிர் நாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும், ஊர் பக்தர்கள் திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு விஜயா நகர், பிரைட் ஹோம், வாட்டர் போர்டு காலனி, குரு சக்தி கார்டன், ஏடி காலனி, ரேணுகாபுரம் வழியாக கிரீன் பீல்டில் உள்ள ஞான விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கும் பூஜைகள் செய்யப்பட்டு திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்களின் படை சூழ ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லட்சுமி நகர் பேஸ் 3ல் உள்ள அருள்தரும் சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 48 நாட்கள் இறைவனின் திருமேனி சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இறை அன்பர்கள் வணங்கி தலவிருட்சம் வில்வம், வன்னி மரம் வைக்கப்பட்டது. பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் ஏராளமான இறையன்பர்களும் சிவனடியார்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...