கோவையில் உள்ள தங்கக்கட்டி விற்பனையகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

கோவை தர்மராஜா கோவில் வீதியில் செயல்பட்டு வரும் 2 தங்கக்கட்டி விற்பனை நிலையங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்ததன் காரணமாக சோதனையை முடித்துக் கொண்டு திரும்பி சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்மராஜா கோவில் வீதியில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மொத்தம் 50 தங்க கட்டி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தங்கக் கட்டிகள் வியாபாரம் செய்யும் இருவரது அலுவலகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது, மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. சட்டத்துக்கு புறம்பான தகவல்களோ பொருட்களோ இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்து புறப்பட்டு சென்றதாக தங்கக்கட்டி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...