சூலூர் அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்த தாய், மகன் கைது!

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் சீல் உடைக்கப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



அதை தொடர்ந்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...