கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது

கோவை சாய்பாபா காலனியில் மெரிட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக கூறி 18 பேரிடம் சுமார் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த விஜயகுமார் என்ற நபரை கைது செய்துள்ள போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இவரும், அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் இணைந்து, இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு மனை இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் வீடு கட்டி விற்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி கடந்த 2019 ஆம் ஆண்டில் வீட்டுமனை மற்றும் வீடு வாங்குவதற்காக பணத்தை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அதில் வீட்டுமனையை கிரையம் செய்ய 10 சதவீத தொகை அட்வான்ஸ் முதலில் தர வேண்டும் எனவும் கிரயத்தின் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் என்ற நிபந்தையுடன் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதில் 26 பேரிடம் கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்று கொண்ட விஜயகுமார், பணத்தை கொடுத்தவர்கள் நான்கு முறை பத்திரப்பதிவுக்கு சென்றபோது இடத்தின் உரிமையாளர் வரவில்லை, பங்குதாரர் வரவில்லை என காரணம் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளார்.

மேலும் பலரிடம் முழுதொகையையும் பெற்றுக்கொண்டு வீட்டை பாதி வரை கட்டி, மீதமுள்ள பணிகளை கிடப்பில் போட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 26 பேரில் சிலருக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 16 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த்தாக, விஜயகுமார் மற்றும் ஜோயல் எமர்சன், திருச்சியை சேர்ந்த கிளமெண்ட் பெர்னா போஸ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...