திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்!

திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். வர்த்தகர்கள் - பொறியாளர்கள் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பிலான 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஆண்டுதோறும் திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.



ஆண்டுதோறும் கட்டிடங்களுக்கு தேவையான புதுவகை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த கட்டிட கட்டுமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடங்கியது.



இதனை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் செங்கற்களுக்கு மாற்றாக வரப்பட்டுள்ள கற்கள், கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் மற்றும் உயர்த்தும் தொழில்நுட்பம், புதுவகை பர்னிச்சர்ஸ், புதிய வகை எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் வர்த்தகர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...