திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்!

திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். வர்த்தகர்கள் - பொறியாளர்கள் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பிலான 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஆண்டுதோறும் திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.



ஆண்டுதோறும் கட்டிடங்களுக்கு தேவையான புதுவகை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த கட்டிட கட்டுமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடங்கியது.



இதனை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் செங்கற்களுக்கு மாற்றாக வரப்பட்டுள்ள கற்கள், கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் மற்றும் உயர்த்தும் தொழில்நுட்பம், புதுவகை பர்னிச்சர்ஸ், புதிய வகை எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் வர்த்தகர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...