சூலூர் அருகே பைக் சறுக்கி விபத்து - பெண் சித்த மருத்துவர் மற்றும் காவலர் உயிரிழந்த சோகம்!

சூலூர் அடுத்த நீலம்பூர் சாலையில் தேனியை சேர்ந்த கண்மணி பிரியா (33) என்ற சித்த மருத்துவர் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சறுக்கி விழுந்த நிலையில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சூலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் சித்த மருத்துவர் மற்றும் காவலர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



சூலூர் அருகே நீலம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த போச்சம்பள்ளியைச் சேர்ந்த காவலர் மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் உள்ளிட்ட இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அரசு சித்த மருத்துவரான கண்மணி பிரியா (33) தேனியில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலம்பூர் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் உறவினரான பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் கண்மணி பிரியா வர்மக்கலை பற்றி பயிற்சிக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்காக பேச்சியம்மாளின் கணவர் காந்திபுரம் வரை கொண்டு சென்று விட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மாலை சுமார் 5:30 மணி அளவில் பேச்சியம்மாளுக்கு போன் செய்து பயிற்சியை முடித்துக்கொண்டு தான் வந்து கொண்டிருப்பதாக சித்த மருத்துவர் கண்மணி பிரியா தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், போச்சம்பள்ளியை சேர்ந்த காவலரான ராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் நீலம்பூர் அவினாசி சாலையில் பேச்சியம்மாள் வீட்டை நோக்கி இருவரும் சென்றுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சறுக்கியதில் இருவரும் கீழே விழுந்தனர்.



அப்போது பின்னால் வந்த லாரியில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் போலீசார் உடனடியாக கண்மணி பிரியா மற்றும் ராஜா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திலிருந்து கோவையில் பயிற்சிக்காக வந்த சித்த மருத்துவர் மற்றும் அவரது உடன் வந்த காவலர் உடல் நசுங்கி உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...