பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!

கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான் என தெரிவித்தார்.



கோவை: பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.



இந்நிகழ்வில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்களிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான்.

இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது 12 நிறுவனங்கள் தான் இருந்தது. தற்பொழுது 132 நிறுவனங்கள் இணைந்துள்ளது. தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...