திருப்பூரில் நியாயவிலை கடையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் - ஆட்சியர் துவக்கி வைப்பு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்தே பருவமழை துவங்கிவிட்டது. இதனால், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே ரூபாய் 130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில், பொது மக்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒரு கடையில் ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் 50 பேருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரும் நாட்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...