திருப்பூரில் நியாயவிலை கடையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் - ஆட்சியர் துவக்கி வைப்பு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்தே பருவமழை துவங்கிவிட்டது. இதனால், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே ரூபாய் 130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில், பொது மக்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒரு கடையில் ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் 50 பேருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரும் நாட்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...